தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) பிரான்சில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் புலிகளின் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த இரு வருடங்களாக பதஞ்சலி சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் நேற்று முன் தினம்(5) உயிரிழந்துள்ளார். அதேவேளை இவரது கணவரும் விடுதலை புலிகளின் வர்த்தக நிறுவனமான சேரன் வாணிபத்தின் பொறுப்பாளராக இருந்தவர் எனவும் கூறப்படுகின்றது.